అధ్యాయం 5: கர்ம ஸன்யாஸ யோகம்

துறவின் யோகம்

இந்த அத்தியாயம் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறத்தல்) கர்ம யோக (பக்தியுடன் பணிபுரிதல்) பாதையுடன் ஒப்பிடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், ஏனெனில் அவை இரண்டும் ஒரே குறிக்கோளுக்கு இட்டுச் செல்கின்றன. இருப்பினும், மனம் போதுமான அளவு தூய்மையாக இருக்கும் வரை, பக்தியுடன் செயல்படுவதன் மூலம் மனத்தின் தூய்மை அடையும் வரை செயல்களைத் துறப்பதை முழுமையாகச் செய்ய முடியாது. எனவே, கர்ம யோகம் என்பது மனிதகுலத்தின் பெரும்பான்மையானவர்களுக்கு பொருத்தமான விருப்பமாகும். கர்ம யோகிகள் தங்கள் உலகக் கடமைகளை புனிதப்படுத்தப்பட்ட புத்திக்கூர்மையுடன் செய்கிறார்கள், தங்கள் செயல்களின் பலனில் உள்ள பற்றுதலைக் கைவிட்டு, கடவுளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். இவ்வாறு, அவர்கள் தாமரை இலையைப் போல பாவத்தால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.-தாமரை இலை அது மிதக்கும் தண்ணீரால் தீண்டப் படுவதில்லை.

 

அறிவின் ஒளியால், உடலை ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் வசிக்கும் ஆன்மாவைப் போல உணர்கிறார்கள். எனவே, அவர்கள் தங்களைச் செய்பவர்களாகவோ அல்லது தங்கள் செயல்களை அனுபவிப்பவர்களாகவோ கருதுவதில்லை. அவர்கள் பார்ப்பன சமத்துவத்தைப் பெற்றவர்கள். ஆகையால் அவர்கள் ஒரு பிராமணன், ஆடு, யானை, நாய் மற்றும் நாய் உண்பவர்களை சமமாகப் பார்க்கிறார்கள். அத்தகைய உண்மையான கற்றவர்கள் கடவுளின் குறைபாடற்ற குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மற்றும் முழுமையான சத்தியத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த்ரியப் பொருட்களால் ஏற்படும் இன்பங்களை, அவை உண்மையிலேயே துன்பத்திற்கு ஆதாரம் என்பதை உணராமல், உலக மக்கள் அதை அனுபவிக்க முயல்கின்றனர். ஆனால் கர்ம யோகிகள் அவற்றில் மகிழ்ச்சியடைவதில்லை; மாறாக, அவர்கள் கடவுளின் பேரின்பத்தை உள்ளே அனுபவிக்கிறார்கள்.

 

அத்தியாயம் பின்னர் துறவின் பாதையை விவரிக்கிறது. கர்ம ஸன்யாஸீகள் தங்கள் புலன்கள், மனம் மற்றும் புத்தியைக் கட்டுப்படுத்த தவம் புரிகிறார்கள். அவர்கள் வெளிப்புற இன்பம் பற்றிய அனைத்து எண்ணங்களையும் மூடிவிட்டு, ஆசை, பேராசை மற்றும் கோபத்திலிருந்து விடுபடுகிறார்கள். பின்னர், கடவுள் பக்தியுடன் தங்கள் துறவறத்தை முடித்து, நிலையான அமைதியை அடைகிறார்கள்.

 

భగవద్గీత 5.1 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அர்ஜுன் கூறினார்: ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நீங்கள் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறக்கும் பாதை) புகழ்ந்தீர்கள், மேலும் நீங்கள் கர்ம யோகத்தையும் (பக்தியுடன் வேலை செய்ய) அறிவுறுத்தினீர்கள். இரண்டில் எது அதிக பலன் தரக்கூடியது என்பதை தயவு செய்து தீர்க்கமாக சொல்லுங்கள்.

భగవద్గీత 5.2 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஒப்புயர்வற்ற பகவான் கூறினார். கர்ம ஸந்யாஸம் (செயல்களைத் துறத்தல்) மற்றும் கர்ம யோகம் (செயல் யோகம்) இரண்டும் இறுதி இலக்கை நோக்கி இட்டுச் செல்கின்றன, ஆனால் கர்ம ஸன்யாஸத்தை விட கர்ம யோகம் மேலானது.

భగవద్గీత 5.3 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யாரையும் விரும்பாத, வெறுக்காத கர்ம யோகிகளை நித்திய ஸன்யாஸீகளாகக் கருத வேண்டும். ஓ வலிமையான அர்ஜுனா, எல்லாவிதமான பிணக்குகளிலிருந்தும் விடுபட்டதால், அவர்கள் மாயையின் அடிமைத்தனத்திலிருந்து எளிதாக விடுதலை பெறுகிறார்கள்.

భగవద్గీత 5.4 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அறிவில்லாதவர்கள் மட்டுமே ஸாங்க்ய யோகம் (செயல்களைத் துறப்பது), மற்றும் கர்ம யோகம் (பக்தியுடன் பணிபுரிதல்) ஆகியவற்றை வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இந்த பாதைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம், இரண்டின் பலனையும் அடையலாம் என்று உண்மையிலேயே கற்றவர்கள் கூறுகிறார்கள்.

భగవద్గీత 5.5 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கர்ம ஸன்யாஸத்தால் அடையக்கூடியதை கர்ம யோகத்தின் மூலமும் அடையலாம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இவ்வாறு கர்ம ஸந்நியாஸத்தையும், கர்ம யோகத்தையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பவர்கள், உண்மையில் எல்லாவற்றையும் அப்படியே பார்க்கிறார்கள்.

భగవద్గీత 5.6 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பக்தியில் (கர்ம யோகம்) வேலை செய்யாமல் பரிபூரணமான துறவு (கர்ம ஸன்யாஸம்) அடைவது கடினம், ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆனால் கர்ம யோகத்தில் திறமையான முனிவர் விரைவாக உச்சத்தை அடைகிறார்.

భగవద్గీత 5.7 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புனிதப்படுத்தப்பட்ட புத்திசாலிகளான கர்மயோகிகள் மனதையும் புலன்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். ஒவ்வொரு உயிரினத்திலும் அனைத்து ஆத்மாக்களின் ஆத்மாவையும் காண்கிறார்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும் அவர்கள் ஒரு போதும் சிக்குவதில்லை.

భగవద్గీత 5.8 - 5.9 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கர்ம யோகத்தில் உறுதியாக இருப்பவர்கள், பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்ந்து பார்ப்பது, அசைவது, தூங்குவது, சுவாசிப்பது, பேசுவது, வெளியேற்றுவது, கிரகிப்பது, கண்களைத் திறப்பது, அல்லது மூடுவது போன்றவற்றில் ஈடுபட்டாலும் ‘நான் செய்பவன் அல்ல’ என்று நினைக்கிறார்கள். ஆழ்நிலை அறிவின் ஒளியில். தெய்வீக அறிவின் ஒளியால், பொருள் உணர்வுகள் அவற்றின் பொருள்களில் மட்டுமே செயல்படுவதை அவர்கள் காண்கிறர்.

భగవద్గీత 5.10 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

தாமரை இலை தண்ணீரால் தீண்டப்படாதது போல, எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டு, தங்கள் செயல்களை கடவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள், பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பார்கள்.

భగవద్గీత 5.11 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யோகிகள், பற்றுதலைக் கைவிட்டு, தங்கள் உடல், புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றைக் கொண்டு சுயச் சுத்திகரிப்புக்காக மட்டுமே செயல்களைச் செய்கிறார்கள்.

భగవద్గీత 5.12 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அனைத்து செயல்களின் பலன்களையும் கடவுளுக்கு வழங்குவதன் மூலம், கர்ம யோகிகள் நிரந்தரமான அமைதியை அடைகிறார்கள். அதேசமயம், தங்கள் ஆசைகளால் தூண்டப்பட்டு, சுயநல நோக்கத்துடன் வேலை செய்பவர்கள் தங்கள் செயல்களின் பலனுடன் இணைந்திருப்பதால் சிக்கிக் கொள்கிறார்கள்.

భగవద్గీత 5.13 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உடல் உற்ற ஆன்மாக்கள் பற்றற்று தன்னடக்கத்துடன் தாங்கள் எதையும் செய்தவர்கள் அல்ல என்ற எண்ணங்களோடு ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்

భగవద్గీత 5.14 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

செயலின் உணர்வோ அல்லது செயல்களின் தன்மையோ கடவுளிடமிருந்து வருவதில்லை; கடவுள் செயல்களின் பலனையும் படைக்கவில்லை. இவை அனைத்தும் ஜட இயற்கையின் முறைகளால் (குணங்கள்) இயற்றப்படுகின்றன.

భగవద్గీత 5.15 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எங்கும் நிறைந்த கடவுள் யாருடைய பாவங்களிலும் அல்லது புண்ணியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஜீவராசிகள் மாயைக்கு ஆளாகிறார்கள், ஏனென்றால் அவர்களின் உள் அறிவு அறியாமையால் மூடப்பட்டுள்ளது.

భగవద్గీత 5.16 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

ஆனால் தெய்வீக அறிவால் அறியாமையை வென்றவர்களுக்கு சூரியன் உதிக்கும்போது எல்லாவற்றையும் ஒளிரச் செய்வது போல, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதமான பொருள் வெளிப்படுகிறது.

భగవద్గీత 5.17 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யாருடைய புத்தி கடவுளில் நிலைத்து ,முழுமையாக மூழ்கி கடவுளையே உயர்ந்த இலக்காக கருதி அசையாத நம்பிக்கையுடன் இருக்கிறதோ, அத்தகைய நபர்கள், அறிவின் ஒளியால் தங்கள் பாவங்கள் அகற்றப்பட்டு, திரும்ப முடியாத நிலையை விரைவாக அடைகிறார்கள்.

భగవద్గీత 5.18 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உண்மையான அறிவாளிகள், தெய்வீக ஞானக் கண்களால், ப்ராஹ்மணரையும், பசுவையும், யானையையும், நாயையும், நாயை உண்பவரையும் சமமாகப் பார்க்கிறார்கள்.

భగవద్గీత 5.19 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

பார்வையில் சமத்துவத்தில் மனதை நிலைநிறுத்துபவர்கள் இந்த வாழ்க்கையில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை வெல்வார்கள். அவர்கள் கடவுளின் குறைபாடற்ற தன்மைகளைக் கொண்டுள்ளனர், எனவே முழுமையான சத்தியத்தில் அமரந்திருக்கிறார்கள்.

భగవద్గీత 5.20 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

கடவுளில் நிலைநிறுத்தப்பட்டு, தெய்வீக அறிவைப் பற்றிய உறுதியான புரிதல் உடைய மற்றும் மாயையால் தடைபடாதவர்கள், அவர்கள் இனிமையான ஒன்றைப் பெறுவதில் மகிழ்ச்சியடைவதில்லை அல்லது விரும்பத்தகாததை அனுபவிப்பதில் வருத்தப்படுவதில்லை.

భగవద్గీత 5.21 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புற புலன் இன்பங்களில் பற்று இல்லாதவர்கள் தெய்வீகத்தை சுயமாக உணர்கிறார்கள். யோகத்தின் மூலம் கடவுளோடு ஐக்கியமாகி, அவர்கள் முடிவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.

భగవద్గీత 5.22 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இந்த்ரியப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள், உலக எண்ணம் கொண்டவர்களுக்கு இன்பமாகத் தோன்றினாலும், உண்மையில் துன்பத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. குந்தியின் மகனே, இத்தகைய இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு, அதனால் ஞானிகள் அவற்றில் மகிழ்ச்சியடைவதில்லை.

భగవద్గీత 5.23 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

உடலை விடும் முன் ஆசை மற்றும் கோபத்தின் சக்திகளை தடுக்க முடிந்தவர்கள் யோகிகள்; அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

భగవద్గీత 5.24 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

எவர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பார்களோ, கடவுளின் மகிழ்ச்சியை அனுபவித்து, உள்ளொளியால் பிரகாசிக்கிறார்களோ, அத்தகைய யோகிகள் இறைவனுடன் ஐக்கியமாகி ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.

భగవద్గీత 5.25 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

யாருடைய பாவங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, சந்தேகங்கள் துடைத்தழிக்கப்பட்டு, எவருடைய மனம் ஒழுக்கம் உடையதாகவும், யார் எல்லா உயிர்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களோ அந்த புனிதமானவர்கள் கடவுளை அடைந்து ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.

భగవద్గీత 5.26 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

இடைவிடாத முயற்சியின் மூலம் கோபம் மற்றும் காமத்திலிருந்து வெளியேறி, தங்கள் மனதை அடக்கி, சுய-உணர்வு பெற்ற ஸன்யாஸிகள் இம்மையிலும் மறுமையிலும் ஜட இருப்பிலிருந்து விடுபடுகிறார்கள்.

భగవద్గీత 5.27 - 5.28 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

புற இன்பம் பற்றிய எண்ணங்கள் அனைத்தையும் அடைத்து, புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பார்வையை நிலைநிறுத்தி, மூக்கின் உள்வரும் மற்றும் வெளியேறும் மூச்சின் ஓட்டத்தை சமப்படுத்தி, புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை மற்றும் பயத்திலிருந்து விடுபடும் ஞானி சுதந்திரமாக வாழ்கிறார்.

భగవద్గీత 5.29 వ్యాఖ్యానం చూడండి » చూడండి »

அனைத்து யாகங்களையும், துறவறங்களையும் அனுபவிப்பவராகவும், அனைத்து உலகங்களுக்கும் மேலான இறைவனாகவும், அனைத்து உயிர்களின் தன்னலமற்ற நண்பனாகவும் என்னை உணர்ந்து, என் பக்தன் அமைதியை அடைகிறார்.
Swami Mukundananda
5. கர்ம ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency